தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Friday, March 30, 2012

ரசனைகள் பலவிதம்

விண்ணைத்தாண்டி
நான் வருகிறேன்..
முதல்காதலைத் தாண்டி
நீ வருகிறாய்
என்றால்..

வற்றிவிட்டதாய்
நீ நம்பிக்கொண்டிருக்கும்
உன் இதயத்தில்
ஒரு துளி
ஈரம் கூடவா
எனக்கு மிச்சமில்லை..

மொளனம் பேசியதாய்
நினைத்துக்கொண்டு
எனக்கு நானே
தப்பான அர்த்தம்
கண்டுவிட்டேனோ..!

தென்மேற்கில்
மையம் கொண்ட
பருவக்காற்றுக்கு
ஏனோ
மழைத்தர
இன்றும் மனமில்லை..

தெருத்தெருவாகத்
அங்காடியில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
நீ உசிரையே
வைத்திருப்பாதாய் சொன்ன
அந்த சிறுபொம்மையை..

அரவமேயின்றி
என் மனதின்
சந்து பொந்துகள்
அனைத்திலும்
ஊடுருவும்
அரவாணே..

வாகை சூட
வருகிறேன்
உன்னுடன் சேர்ந்து
வாழ்வை
ஆட்சி புரிவதாயின்..

அலைப்பாய்கின்ற
மனதை
கட்டுப்படுத்திவிடத்தான்
தவிக்கிறேன்..

உனது அறியாமை
எனது இயலாமைக்கு
அஞ்சலி
செலுத்தும் முன்..!

7 comments:

  1. எல்லோருமே அழகுதான்... சாரி சாரி எல்லா வரிகளுமே அழகுதான்.

    ReplyDelete
  2. அட... அட... அழகுக் கவிதைகளுக்கு துணையாய் புகைப்படக் கவிதைகள்! பிரமாதம்மா!

    ReplyDelete
  3. அந்தந்த திரைப்பட நாயகிகளின் நிழற்படங்களை போட்டு
    அதற்கான துளிப்பாக்கள் மிக அருமை சகோதரி....

    ReplyDelete
  4. அருமையான கவிதை வரிகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. அருமையான வரிகள் அதற்கேற்ற படங்கள். நன்றி

    ReplyDelete
  6. படங்களுடன் பதிவும்
    தலைப்பும் தொடுப்பும் முடிவும் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..! :)

    ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)