தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Friday, February 10, 2012

பாரபட்சம்


ஏன் இந்த பாரபட்சம்..

நாம் செய்த தவறு விதி
பிறர் செய்த பிழை சதி?

உடல்நலக் குறைவு அரவணைப்பு
மனநலக் குறைவு நிராகரிப்பு?

செயற்கை மார்பகங்கள் பிரமாதம்
செயற்கை கால்கள் ஐயோ பாவம்?

ஜாதகம் சேராமல் இரத்தாகும் சம்பந்தம் கெளரவம்
மனம் ஒப்பாமல் பிரியும் பந்தங்கள் அநாகரிகம்?

அதிகம் படித்த மாப்பிள்ளை extra மதிப்பு
அதிகம் படித்த மணப்பெண் extra வசூலிப்பு?

நீ ஈன்றெடுத்த பிள்ளையின் குறும்புகள் வரம்
உன்னை ஈன்றோரின்
இரண்டாம் குழந்தைப்பருவம் பாரம்?

8 comments:

  1. அழகான கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  2. கவிதையின் வரிகள்
    தீ மூட்டுகிறது மனசில்.
    நீர் வழிக்கிறது கண்களில்.

    தீபிகா.

    ReplyDelete
  3. அழகை எழுதுகிறாய். பயமாக இருக்கிறது. அழகான எழுத்துக்களில் தொலைந்து போவதை வாடிக்கையாக கொண்டவன் நான். நானும் ஒரு வலை பூ வின் சொந்தக்காரன் தான். எஜமானன் அல்ல. சுமாராக எழுத தெரியும். நேரம் கிடைத்தால் நுழைந்து பார்க்கவும்.

    http://loveableblacky.blogspot.in/
    http://moovjabi.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் அழைப்பிற்கும் நன்றி..! :)

      Delete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)