தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Wednesday, January 25, 2012

யாரைக் குற்றஞ்சொல்வது..


அசைந்தாடிக் கொண்டிருந்தாள்
அழகிய நாணலாய்..
வருடிக் கொண்டு வந்தான்
மென் தென்றலாய்..
அவள் வளைந்தாடியதை ரசித்தான்
சில காலம்..
எவ்வளவுதான் வளைகிறாள் பார்ப்போமென்று
வளைத்துப்பார்த்தான் போலும்..
எல்லை மீறி ஆட்டுவித்ததில்
வேருடன் சரிந்துவிட்டாள் அவள்..
இன்று,         
உயிறற்றுக் கிடக்கும் “வெற்றுக் குச்சி”க்கு
மனமுருகி மழைக்காக வேண்டுகிறான்,
அவளை மீண்டும் துளிர்க்க வைக்கும்
நப்பாசையில்!!!
ஹிம்ம்ம்.. கண்கெட்ட பின்
சூர்ய தரிசனம்!!!

2 comments:

  1. சிறப்பான கவிதைங்க...

    ReplyDelete
  2. இப்படிஎல்லாம் எழுதுனா தேன்சிட்டு டாப்புதான்..

    ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)